செவ்வாய், 27 டிசம்பர், 2016

கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருக

கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருக

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை
ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை
சர்வ தாரித்திரிய நிவாரணாயை
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா:

ஸ்ரீ மஹாலெட்சுமி மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஸ்ரீரியை நம

காலை மாலை 108 முறை சொல்லி வந்தால் விரைவில் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

மனோவியாதி, விரோதிகளால் அச்சம் நீங்கி மனோதைரியம் பெற

ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்
ஸூகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம்
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னி தத்ஸ்வ !!

எடுத்த காரியத்தில் வெற்றி பெற

ராமதூத மஹாதீர ருத்ர வீர்ய சமுத்பவ
அஞ்ஜநாகர்ப்ப சம்பூத, வாயு புத்ரா நமோஸ்துதே

(திருமண தடைநீங்கி திருமணம் நடைபெற தினமும் பெண்கள் கூறவேண்டியது. இதை தினமும் 108 முறை சொல்லவும்)

சர்வ மங்கள மாங்கல்யே சிவே
சர்வார்த்த சாதகே ! சரண்யே
த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே

இதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும்.

ஸ்ரீசுப்ரமண்யர்

(செவ்வாய்தோஷம் விலக தினமும் 108 முறை சொல்லவும்)

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்
மஹாமதிம் திவ்ய மயூர வாகனம்
ருத்ரஸ்ய ஸுனும் ஸூரசைன்ய நாதம்
குஹம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

சகல காரியங்களும் ஸித்திக்கும் ஸ்ரீவித்யா மகா மந்திரம்

ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி
சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி
சர்வாபீஷ்டம சாதய சாதய ஆபதோ நாசய நாசய
சம்பதோப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ

சகல தேவதா ஸ்ரீகாயத்ரி மந்திரங்கள்
ஸ்ரீ காயத்ரி கஷ்டங்கள் விலக

ஓம்
பூர்ப் புவஸ்ஸுவ
தத்ச விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீம ஹி
தியோ யோந ப்ரசோதயாத்

சனி, 12 நவம்பர், 2016

மகா வசிய சக்தி சாரணை

 மகா வசிய சக்தி சாரணை

பொற்றியென்ற சக்திசா ரணையை வாங்கப்
 பொருந்தியதொர் சங்கரம நாளில்சென்று
ஊற்றியென்னும் நூல்கட்டி மந்திரந்தான்
 உரைத்திடவே ஓம்பரமா பரமானந்தி
மாற்றி மகா சக்தி கமல வல்லி
 மாதாவே என்று சொல்லி சமூலம் வாங்கி 
நெற்றியெனும் பொடியாக்கி நித்தங்கொள்ள
நிலைத் தெந்த ஆயுதமும் தைத்திடாதே
                                                                           -கருவூரார்
பொருள்:                                 
                  சக்தி சாரணையைமகா வசிய சக்தி சாரணை எடுக்க சங்கரம நாளில்  சென்று நூலால் காப்பு கட்டி ."ஓம் பரமா பரமானந்தி மகா சக்தி கமலவல்லி மாதாவே " என்று மந்திரம் சொல்லி சமுலமாக எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் உண்ண,எந்தவித ஆயுதமும் உடலில் தைக்காது [உடலில் ஆயுதம் பாயாது

அகத்தியர் மகா வசிய வீபூதி

அகத்தியர் மகா வசிய வீபூதி

கிருபையுள்ள புலத்தியனேவ  சியமென்று
 கெணிதமுடன் சொல்லுகிறே நன்றாய் கேளு
துருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று
 சுகமாக வெந்த அஸ்த்திநீயே டுத்து மைந்தா
அருவமுள்ள அஸ்தியுடன் விஷ்ணு மூலி
 ஆதிசத்தி தன்னுடைய வேருங்கூட்டி க்
கருவையினிச் சொல்லுஅகத்தியர் மகா வசிய வீபூதிகிறேன்க லசப் பாலாற்
 கருணையுடன் றானரைத்தே யுண்டை செய்யே

 புலத்தியனே வசியமுறை ஒன்றை கூறுகிறேன் கேட்பாயாக. சிவனின் பூமியாகிய சுடுகாட்டிற்க்கு சென்று நன்கு வெந்த அஸ்தியை எடுத்துகொள் அத்துடன் விஷ்ணு கிரந்தியின் வேரினை கூட்டி தாய்பால் விட்டரைத்து உருண்டை செய்து வைக்க வேண்டும்..

செய்யடா உருண்டைதனையு லர வைத்துச்
 செம்மையுட னெருவடுக்கிப் புடத்தைப்போடு
மெய்யடா சொல்லிகிறே நீறிப் போகும்
 வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி
வையடா சவ்வாதுடனேபு  னுகு சேர்த்து
 மார்க்கமுடன் அங்கெனவெ லட்ச மோதி
மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி
 மார்கமுடன் அரசாரிடன்சென்று பாரே

இவ்வாறு செய்த உருண்டையை நன்கு உலரவைத்து நன்கு எருவடுக்கி புடத்தை போட வேண்டும் புடம் போட்டு வெந்த நீற்றை எடுத்து சவ்வாது ,புனுகு ஆகியவற்றை கூட்டி முறையாக "அங் " என்று ஒரு லட்சம் உரு ஓதி அரசரிடம் சென்று பார் ......

சென்றுமிக நின்றுடனேயி ராச மோகம்
 சிவசிவா செகமோகம் ஸ்ரீவ சியமாகும்
அண்டர் பிரானருள் பெருகிவசிய முண்டாம்
 அப்பனே ஓம் கிலியு றீயு மென்று
பண்டுபோலி லட்சமுரு வெற்றிப் பின்னர்
 பாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால்
தொண்டரென்றே சத்ருக்கள்வ ணங்கு வார்கள்
 துஷ்டனென்ற மிருகமெல்லாம்வ  சிய மாமே ...
                                                                               -அகத்தியர் பரிபூரணம்

அவ்வாறு சென்றவுடன் ராஜவசியமாகும். அதுமட்டுமல்லாது செக வசியமும் பெண் வசியமும் உண்டாகும். சிவன் அருள் பெருகி அனைத்தும் வசியமாகும்.

முறையாக அமர்ந்து "ஓம் கிலிறீ" என்று லட்சம் உரு கொடுத்து விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டால் எதிரிகள் உன்னை வணங்குவார்கள். துஷ்ட மிருகமெல்லாம் வசியமாகும் ...

புதன், 14 செப்டம்பர், 2016

தொழில் செழிக்க குபேர ராஜவஸ்ய மந்திரம்

தொழில் செழிக்க குபேர ராஜவஸ்ய மந்திரம்

தொழில் செழிக்க குபேர ராஜவஸ்ய மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் குபேராய ஐஸ்வர்யாய குபேர ராஜாய சங்க ரூபாய வியாபார வ்ருத்திம் குரு குரு ஸ்வாஹா.

2. ஓம்க்லீம் ஸ்ரீம் குபேராய தனாகர்ஷணாய தனராஜாய மம வ்யாபார ஸ்தலே தனங்ருத்திம் குரு ஸ்வாஹா.

3. ஓம் ஸ்ரீ வர்ரீம் க்லீம் ஐம் ஓம் தனதான்யாய க்லீம் நமோ குபேர ராஜ யட்சேசாய அஸ்ய யஜமானஸ்ய வ்யாபார அனுகூலம் வர்தய வர்தய ஸ்வாஹா.

சுவர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகம்

சுவர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகம்

சுவர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகம்
:  இந்த ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தருவது. வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும், சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.

பவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு பதினெட்டு தடவை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பௌர்ணமி பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன லாபத்தை அடைவார்கள். நீண்ட நாட்களாக பிடித்துக் கொண்ட வறுமையிலிருந்து விடுபடுவார்கள். ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் செய்து நிவேதிக்கலாம்.

வசதிக்கும், வாய்ப்புக்கும் ஏற்ப நிவேதனப் பொருளைக் கூட்டிக் கொள்ளலாம். அளவற்ற கீர்த்தியையும் தனத்தையும் தரும் இந்த பவுர்ணமி பூஜையை விடாமல் செய்பவர்களுக்கு சந்தோஷம் நிரந்தரமாக இருக்கும்.

தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின்
 தளர்வுகள் தீர்ந்துவிடும்
 மனந் திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்
 மகிழ்வுகள் வந்து விடும்
 சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை
 சிந்தையில் ஏற்றவனே
 தனக்கிலை யீடு யாருமே என்பான்
 தனமழை பெய்திடுவான்

 வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
 வாரியே வழங்கிடுவான்
 தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
 தானென வந்திடுவான்
 காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
 காவலாய் வந்திடுவான்
 தனக்கிலை யீடு யாருமே என்பான்
 தனமழை பெய்திடுவான்

 முழு நில வதனில் முறையொடு பூஜைகள்
 முடித்திட அருளிடுவான்
 உழுதவன் விதைப்பான் உடைமைகள் காப்பன்
 உயர்வுறச் செய்திடுவான்
 முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து
 முடியினில் சூடிடுவான்
 தனக்கிலை யீடு யாருமே என்பான்
 தனமழை பெய்திடுவான்

 நான்மறை ஒதுவார் நடுவினில் இருப்பான்
 நான்முகன் நானென்பான்
 தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
 தேவைகள் நிறைத்திடுவான்
 வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
 வாழ்த்திட வாழ்த்திடுவான்
 தனக்கிலை யீடு யாருமே என்பான்
 தனமழை பெய்திடுவான்

 பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
 பூரணன் நான் என்பான்
 நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
 நாணினில் பூட்டிடுவான்
 காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
 யாவையும் போக்கிடுவான்
 தனக்கிலை யீடு யாருமே
 என்பான் தனமழை பெய்திடுவான்

 பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
 பொன் குடம் ஏந்திடுவான்
 கழல்களில் தண்டை கைகளில் மணியணி
 கனகனாய் இருந்திடுவான்
 நிழல் தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும்
 நின்மலன் நானென்பான்
 தனக்கிலை யீடு யாருமே
 என்பான் தனமழை பெய்திடுவான்

 சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான்
 சத்தொடு சித்தானான்
 புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
 புண்ணியம் செய்யென்றான்
 பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
 பசும்பொன் இதுவென்றான்
 தனக்கிலை யீடு யாருமே என்பான்
 தனமழை பெய்திடுவான்

 ஜெய ஜெய வடுக நாதனே சரணம்
 வந்தருள் செய்திடுவாய்
 ஜெய ஜெய க்ஷத்திர பாலனே சரணம்
 ஜெயங்களைத் தந்திடுவாய்
 ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
 செல்வங்கள் தந்திடுவாய்
 தனக்கிலை யீடு யாருமே என்பான்
 தனமழை பெய்திடுவான் :-

வேப்பமரத்தடி விநாயகர்

வேப்பமரத்தடி விநாயகர்

வேப்பமரத்தடி
விநாயகர்
வணக்கம் நண்பர்களே!

வேப்ப மரத்தடியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பஞ்ச தீப என்னை எனப்படும் ஐந்து வித எண்ணை கொண்டு (தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய், பசு நெய்,
இலுப்பெண்ணை, விளக்கெண்ணை)  தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால்  மனதிற்கு ஏற்ற வரன் அமையும். ஏற்றுமது, இறக்குமதி வியாபாரம் செழிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுக்கு அடிமையாய் செயல்படும் நிலை அகலும். குடும்பத்தில் மைத்துனி, நாத்தனார், மாமியார் கொடுமைகள் தீரும்.

பாகற்காய் கலந்த உணவை தானம் செய்தல் உத்தம பலன்களைப் பெற்றுத் தரும். கிழக்கு நோக்கிய வேப்பமரத்தடி விநாயகர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்.

நன்றி நண்பர்களே!

மாந்திரீக ரகசிய பரிகாரங்கள்

மாந்திரீக  ரகசிய பரிகாரங்கள்



1.விநாயகருக்கு சுண்டைக்காய் மலர் வைத்து வழிபட உடலில் உள்ள தீய சக்திகள் விலகி ஓடும் .

2.வெளியில் செல்லும் பொழுது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில
நாணயங்களை > பூமியில் போட்டு விட்டு அவ்விடத்தை விட்டு செல்ல, அந்த ஆத்மவினால் ஏற்படும் எதிர் மறை விளைவுகள் ஏற்படாமல் இருக்கும்.

3.தினசரி வீட்டை விட்டு கிளம்புமுன் நீர் நிரம்பிய பாத்திரமோ அல்லது நீர் நிரம்பிய பக்கெட்/தொட்டி /குளம் பார்த்து செல்ல, போகிற விஷயம் சுபமாய் முடியும்.

4.கொடுத்த கடன் திரும்ப வரவில்லை எனில் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு தினசரி 43 நாட்கள் நீல நிற பூவை வைத்து வேண்டி வர கடன் வசூலாக ஆரம்பிக்கும்.

5.அண்டை அயலார் மூலம் தொடர்ந்து தொல்லைகள் ஏற்பட்டால் தினசரி வீட்டு முன்
 மெழுகுவர்திகளை ஏற்றி வேண்டி வர தொல்லைகள் நீங்கும் .

6.எதிரிகள் தொல்லை மற்றும் சோதனைகள் அதிகமானால் வெள்ளிக்கிழமைகளில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வர, எதிரிகள் நிலை செயல் இழந்து போகும்.

8. பசுவானது பால் கறக்கும் நிலையில் இருக்கும் போது தானம்
செய்வதுதான் மிக சிறந்த தானமாகும். பால் கறக்கும் பாத்திரமும் கொடுப்பது இன்னும் சிறப்பானது,பசுவுடன் காளையையும் சேர்த்து தானம் அளிப்பார்கள். இந்த தானம் கூடுதல் பலன் தருவதாகும்..

9.ஒரு பசு முதல் கன்று பிரசவித்ததும், அதை +தேனு+ என்பார்கள்.
{இரண்டாவது கன்று} பிரசவித்ததும் அதற்கு
கோ'' + என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள்,

* அகவே பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்...

10. முதல் ஆண் குழந்தையின் அரைஞாண் கயிற்றை பணப்பெட்டியில் வைக்க செல்வ வளம் சேரும்.

11. வசிய கட்டு ,தீய மைகள் , தீய வசிய ஏவல் போன்ற சக்திகள் ஒரு மனிதனுக்கு செய்யப்பட்டு இருந்தால் அவைகள் மழை நீரில் அல்லது கறந்த பசும்பாலில்(கறவை சூடாக) தலையில் நனைந்து விட்டால் அந்த சக்திகள் செயல் இழந்து போகும் ....

12. வலம்புரி சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளித்தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர்சில்வர் தட்டில் வைத்து வழிபடலாம்...

13. ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது நீரைக்குடித்துவிட்டு, சிறிது நீரை வாசற்படியில் தெளிக்கவும்.

14.வலம்புரி சங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது. மாமிச உணவருந்திய தினங்களிலும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச் சங்கைத் தொடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது,.

சபரி மலை செல்வது ஒரு யாகம்

சபரி மலை செல்வது ஒரு யாகம்

சபரி மலை செல்வது ஒரு யாகம்

சபரிமலைக்கு அய்யன் தரிசனத்தின் போகும் போது நெய் கொண்டு செல்வது ஏன்?

இருமுடியில் நெய் நிறைத்து நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு
முன்று காரணங்கள் உள்ளன. முதல் இரண்டு காரணங்கள் புராண கதைகளை சார்ந்ததாகவும் , மூன்றாவது நமது வாழ்க்கையை  சார்த்துமாய் உள்ளன.

முதல் காரணம்: பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே புலிப்பாலால் தலைவலி தீரும் என பொய்க்காரணம் காட்டி ஐயப்பனை காட்டுக்கு அனுப்புகின்றனர். வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்பதற்காக பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினான். அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் வைத்துக் கொடுத்தான். அந்த இருமுடிகளையும் இணைத்து திருமுடிமேல் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஸ்ரீஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு ஐயப்பன் செய்தது போலவே, இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறையாக அதுமாறி, நாளடைவில் நிலைத்தும்விட்டது.

இரண்டாவது காரணம்: ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார். அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார்.மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.

எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காணச் செல்வதென்றால் எளிதான காரியமா? பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும்.எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம் நாளடைவில் உருவானது. அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு.

மூன்றாவது முக்கிய காரணம், தேங்காய் மற்றும் ஓடு  என்பது நமது உடல். தேங்காயில் நார் எல்லாம் நமது நாடி நரம்புகளால் சூழ பட்டது. தேங்காயின் உள்ளே உள்ள வெள்ளை பகுதி நமது சதை பகுதி, நமது உடல் முழுவதும் நீர்  மற்றும் இரத்தம்நிரம்பி உள்ளது அது தான் இளநீர். நமக்கு இருப்பது போல்  தேங்காயின்  வெளியே இரண்டு கண்கள் உள்ளன. மூன்றாவது கண் தான் ஞான கண். நெய் நிறைப்பதற்கு முன் தேங்காயின் மூன்றாவது கண் ஆன ஞான கண் திறக்கபட்டு அதன் உள்ளே உள்ள இளநீர் வெளியே எடுக்கபட்டு, பிறகு நமது ஆன்மாவை நெய்யாக உறுக்கி, மூன்றாவது கண் ஆன ஞான கண் வழியாக நமது
துயமான ஆத்மாவை நெய் வடிவில் உருக்கி நீரைக்கப்படுகின்றது. சபரிமலை சென்று அடைந்த பிறகு குருசுவாமி துணை கொண்டு அந்த தேங்காயை இரு பாகமாக உடைக்கப்பட்டு , அதாவது நமது ஆணவம், அகம்பாவம் எல்லா வற்றையும் உடைத்து,நெய்யை  மட்டும் வெளியே எடுத்து, அந்த பரிசுத்தமான நமது ஆன்மா வடிவிலான நெய்யை  சரணாகத வத்சலனான சபரிகிரி வாசனுக்கு அபிஷேகம் செய்ய படுகின்றது. நமது ஆன்மாவே இறைவனிடம் சேர்த்த பின் நமது உடல் உயிர் இல்லாத பிணம். அதை உணர்த்த தான் தேங்காய் இரண்டு பாகத்தையும் தீயில் இடுகின்றோம்.

 எத்தனை முறை சபரிமலை சென்றோம் என்பது முக்கியமில்லை. ஒவ்வொரு வருடம் சபரிமலை சென்று நாம் எந்த அளவிற்கு, நமது வாழக்கையை செம்மை படுத்தி உள்ளோம் என்பதே முக்கியம். எல்லோரும் செல்கின்றனர் நாமும் செல்வோம் என்று செல்வதில் எந்த பயனும் இல்லை . சபரிமலை செல்வது ஒரு யாகம். மற்ற கோவில்களுக்கு செல்வது போல் செல்லக் கூடாது  நாம் எப்படி ஒழுக்கத்துடன் அய்யனை தரிசனம் செய்ய நம்மை ஆயத்தபடுத்தி உள்ளோம் என்பதே மிகவும் முக்கியம். எத்தனை முறை சந்நிதியில் அய்யனை தரிசனம் செய்தோம் என்பது முக்கியம் அல்ல அய்யன் நம்மை ஒருமுறை பார்த்தானா என்பது தான் முக்கியம்.

தற்காலத்தில் சபரிமலை செல்வது ஒரு உல்லாச பயணமாகி விட்டது. அப்படி செல்லாமல், அசைக்க முடியாத மனம் ஒருநிலை படுத்திய தூய பக்தியுடன் சபரிமலை செல்வோம் வாழ்வில் பல நன்மைகளை அவன் அருளாலே அடைவோம்.

சரணாகத வத்சலனே சரணம் ஐயப்பா.

அர்ஜூனனுக்கு முதலில் கடினமான

1. அர்ஜூனனுக்கு முதலில் கடினமான

1. அர்ஜூனனுக்கு முதலில் கடினமான
சொற்களின் மூலம் அறிவுறுத்த எண்ணினார் பகவான் கிருஷ்ணர்.
"உனக்கு என்ன ஆகி விட்டது இப்பொழுது? இந்த எண்ணம் தவறான நேரத்தில் உனக்கு எப்படி வந்தது?
அனைவரும் நீ போர்க்களத்தில் இருந்து புறமுதுகிட்டு ஓடி விட்டாயென சொல்லுவர். அதனால் உனக்கு பேரிழுக்கு ஏற்படும்.
2. இவ் வார்த்தைகள் அர்ஜுனனை போரிட தயார் படுத்தவில்லை.
ஆதலால் இந்த உடல் மற்றும் ஆன்மாவின் இயல்பை அர்ஜுனனுக்கு
விளக்க ஆரம்பித்தார் பகவான் கிருஷ்ணர்.
3. நமது உண்மையான இயல்பு ஆன்மாவே - உடல் அல்ல. இந்த
உடல் தற்காலிகமானது அழியக்கூடியது
ஆனால் ஆன்மா நிரந்தரமானது,
அழிக்கமுடியாதது. ஆதலால் இவ்வுடலில் இறப்பிற்கு துக்கப்பட
வேண்டியதில்லை. ஏனெனில் நமது ஆன்மா இறப்பதில்லை.
4. இது ஞான யோகத்தின் கண்ணோட்டம். கர்ம யோகத்தின் பார்வையிலும் நாம் நமது கடமையை
செய்ய வேண்டும். ஒரு வீரனின் கடமை போர் செய்வது. நியாயமான
மக்களை காப்பது. எவன் ஒருவன் தனது கடமையை செவ்வனே செய்து அதன் பலனை பரிபூரணமாக எனக்கு
அர்ப்பணிக்கிறானோ அவனுக்கு அதனால் எந்த பாவமோ பந்தமோ
ஏற்படுவதில்லை.
5. சமநோக்குடன் இப்போரில் பங்கேற்கும் கடமையை செய். உன்னத
நிலையை அவ்வாறே அடைவாய்.
சீரான மனநிலை உடையவர்கள் வழியும் அதுவே.
6. இந்த சீரான மனநிலை உடையவர்களை எப்படி அடையாளம்
கண்டு கொள்வது என்று தெரிந்து கொள்ள அர்ஜூனன் ஆவல் கொண்டான்
7. பகவான் கிருஷ்ணர் அத்தகைய
மனிதரிடம் நான்கு குணங்களை சுட்டிக்காட்டினார். முதன்மையானது
- அவர் தன் மனதின் ஆசைகளை துறந்து, எந்நேரமும் தன் ஆத்மாவுடன் இணைந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்.
8. இரண்டாவதாக அவர் கோபம், தாபம், பயம் முதலியவற்றில் இருந்து விடுபட்டு சுகத்திலும் துக்கத்திலும்
சமமாக வாழ்கிறார்.. , தன் உணர்வுகளை
அதைத் தூண்டும் பொருள்களில் இருந்து காத்துக்கொள்ள , ஆபத்தின்
அறிகுறி தெரியும் போதே சுதாரிக்கும்
ஆமையைப் போல பின் வாங்கிக்கொள்கிறார்.

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் பற்றிய சில ஆன்மீக தகவல்கள்

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் பற்றிய சில ஆன்மீக தகவல்கள்

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் பற்றிய சில ஆன்மீக தகவல்கள் தினம்தோறும் ஸ்ரீவேங்கடேசஸ்ரீவேங்கடேசஅதிகாலையில் திருப்பதி-திருமலையில் நடை திறக்கும் போது பதிவு செய்யப்பட்ட ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதத்தை இசைக்க விடுகிறார்கள் தேவஸ்தானத்தார்.இந்த வேளையில் நடைபெறும் தரிசனத்துக்கு, ‘சுப்ரபாத தரிசனம்’ அல்லது ‘விஸ்வரூப தரிசனம்’ என்று பெயர். சுமார் 200-லிருந்து 250 பக்தர்கள் வரை இந்த தரிசனத்துக்கு அனுமதி உண்டு. இதற்கான முன்பதிவை, ஆன்லைனிலும் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.‘சுப்ரபாத சேவை’ தரிசனம் அரை மணி நேரம் மட்டுமே. இந்த சேவையின் முடிவில், வாத்திய முழக்கங்களுடன் ஸ்ரீவேங்கடவனின்கருவறைக்கு முன்னால் உள்ள தங்கக் கதவுகள் திறக்கப்படும். திருமலா ஸ்ரீமடத்தின் ராமானுஜ ஜீயர் கற்பூரத்தை ஏற்றி கருவறையில் இருக்கும் பிரதான அர்ச்சகரிடம் தருவார். அவர் அதை வாங்கி, மூலவர்ஸ்ரீவேங்கடாசலபதிக்கு ஸ்ரீமந் நாராயணனின் திருநாமங்களை ராகத்துடன் சொல்லி ஆரத்தி செய்வார்.மார்கழி மாதம் மட்டும், திருமலை - திருப்பதியில் பெருமாள் சன்னிதானத்தில் சுப்ரபாதம் ஒலிப்பதில்லை. காரணம் - அந்த ஒரு மாதம் மட்டும் சுப்ரபாதத்துக்குப் பதிலாக ஆண்டாளின் திருப்பாவைபாடப்படுகிறது.பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்இந்த ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் எனும் வைணவப் பெரியவரால் எழுதப்பட்டது. ஐநூறு வருடத்துக்கும் பழமையான மூல ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டும், ஆழ்வார் பாசுரங்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டும், இந்த சுப்ரபாதத்தை இயற்றி இருக்கிறார் இந்தப் பெரியவர்.சுப்ரபாதத்தை இயற்றிய பெருமைக்கு மட்டும் அண்ணங்கராச்சாரியார் சொந்தமல்ல. அவரது குரலில்தான் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் திருமலை திருச்சன்னிதியில் நீண்ட காலமாக ஒலிபரப்பப்பட்டுவந்தது.தினமும் சுப்ரபாத சேவை தொடங்கப்படும் வேளையில் அண்ணங்கராச்சாரியார் குரலில் ஆலயப் பகுதியில் சுப்ரபாதம் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கிவிடும். இதற்கென இவரது குரலில் சுப்ரபாதத்தைப் பதிவு செய்து வைத்திருந்து, அதை ஒலிபரப்புவது தேவஸ்தானத்தாரின் வழக்கம். அப்போதெல்லாம் சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் வாங்கி, பெருமாளின் விஸ்வரூப தரிசனத்துக்குக்காத்திருக்கும் பக்தர்கள், அண்ணங்கராச்சாரியாரின் குரலோடு இணைந்து மனம் உருகி சுப்ரபாதம் பாடுவது வழக்கம்.வைணவத் துறைக்கு எண்ணற்ற சேவைகள் புரிந்த இந்த வைணவ மேதை காஞ்சிபுரத்தில்வாழ்ந்தவர். ‘பிரதிவாதி பயங்கரம்’ என்பது இவரது பட்டப் பெயர். எதிராளியுடன் நடக்கும் வாதப் போரில், எதிர் அணியினருக்குப் பயங்கரமானவராக இருப்பவர் என்ற பொருளில் இந்தப் பட்டப் பெயர் இவருக்கு அமைந்தது. 1983, ஜூன் 21-ஆம் தேதி இவர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.இவருக்கு நான்கு மொழிகளில் புலமை உண்டு. வைணவர்களால் ஓர் ஆழ்வாராகவே மதித்துப் போற்றப்பட்டவர் இவர். தன் காலத்தில் 1,207 புத்தகங்கள் எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரிய மூட்டும் தகவல். ஒரே நேரத்தில் வலது கையால் தமிழிலும், இடது கையால் சம்ஸ்க்ருதத்திலும் எழுதும் வல்லமை இவருக்கே உரித்தான சிறப்பம்சம்.1975-லிருந்துதான் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் குரலில் திருமலையில் சுப்ரபாதம் ஒலிக்கத் தொடங்கியது. அதற்கு முன்வரை, பிரதிவாதி பயங்கரம் ஸ்வாமியின் குரலில்தான், சுப்ர பாதம் திருமலையில் ஒலித்துக் கொண்டிருந்தது.

திங்கள், 6 ஜூன், 2016

வெற்றிலை பரிகாரம்

மேஷம்:
வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துனபங்கள் அகலும்.
ரிஷபம்:
வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.
மிதுனம்:
வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.
கடகம்:
வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக் கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்.
சிம்மம்:
வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்.
கன்னி:
வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.
துலாம்:
வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.
விருச்சிகம்:
வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.
தனுசு:
வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
மகரம்:
வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
கும்பம்:
வெற்றிலையில் நெய் வைத்து சனிகிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
மீனம்:
வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்.

புதன், 30 மார்ச், 2016

கருவறையில் அமைக்கப்படும் மூலவர் பற்றி காணலாம்

கருவறையில் அமைக்கப்படும் மூலவர் பற்றி காணலாம்

கருவறையில் அமைக்கப்படும் மூலவர் பற்றி காணலாம். மனிதனை இறைவனோடு தொடர்பு கொள்ளச் செய்வதே மூலவர் தான். மூலவருக்குரிய சிலையை விஞ்ஞான அடிப்படையில் வடிவமைக்க வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் தெளிவாக அறிந்திருந்தனர்.
இது தொடர்பான குறிப்புகளை அவர்கள் ரிக் வேதத்தில் எழுதி வைத்துள்ளனர். ஆலயங்களில் உள்ள மூலமூர்த்தி சிலா விக்கிரகம், சுதை மூர்த்தி, தாருக மூர்த்தி என்று மூன்று வகைப்படும், சிலா விக்கிரகங்கள் என்பவை கல் அல்லது உலோகத்தால் செய்யப்பட்டதாக இருக்கும். சுதை மூர்த்தி என்பது பலவித மூலிகை கலவைகளை சேர்த்து, அதனுடன் தேன், சுண்ணாம்பு கலந்து உருவாக்கப்பட்டதாக இருக்கும்.
தாருக மூர்த்தி என்பது மரத்தினால் செய்யப்பட்ட மூல அமைப்பாக இருக்கும். இத்தகைய மூலவர்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள பழமையான ஆலயங்களில் காணலாம். ஆனால் 99 சதவீத மூலவர் சிலைகள் கருங்கல்லில்தான் இருக்கும். ஆதிகாலத்தில் ஆலயங்கள் தோன்றும் முன்பே மூலவர்களை வடிவமைக்கும் கலையை தமிழர்கள் கற்றுக் கொண்டு விட்டனர்.
மலைக்காடுகளில் சுற்றித் திரிந்த அவர்களுக்கு எங்கு பார்த்தாலும் கருங்கற்களைத் தான் காண முடிந்தது. எத்தனை நாட்களுக்குத் தான் அந்த கற்களையே பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அந்த கற்களில் இறை வடிவங்களை செதுக்கத் தொடங்கினார்கள். அதன்பிறகு தான் கருங்கல்லில் பஞ்சபூதங்களும் இருக்கும் அறிவியல் உண்மையை அறிந்தனர்.
நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று – இந்த ஐந்தும் தான் பஞ்சபூதங்கள். ஒரு கல்லை மற்றொரு கல்லுடன் உராய்ந்தால் தீ வரும். எனவே தீ கருங்கல்லில் உள்ளது. கருங்கற்கள் பொடி, பொடியாக நொறுங்கும் போது மண்ணாக மாறுகிறது. இது நிலத்தை காட்டுகிறது. மலைக்காடுகளில் பார்த்தால் கல்லுக்குள் இருந்து தான் தண்ணீர் ஈரமாக கசிந்து வெளியில் வரும்.
ஆக கல்லுக்குள் தண்ணீரும் இருக்கிறது. கல்லுக்குள் தேரை உள்ளிட்ட உயிரினங்கள் வாழும். இதன் மூலம் கருங்கல்லில் ஆகாயமான வெற்றிடமும், சுவாசிக்க காற்றும் இருப்பது உறுதியாகிறது. இப்பிரபஞ்சத்தை காக்கும் கடவுளுக்குரிய மூலவர் சிலை, பஞ்சபூத சேர்க்கையோடு தொடர்பு கொண்டதாக இருத்தல் வேண்டும் என்று சிந்தித்த தமிழர்களுக்கு கருங்கல் ஒன்றே அவர்களின் தேர்வாக இருந்தது.
எனவே கருங்கற்களில் மூலவர் விக்கிரங்களை செய்தால், அவற்றில் மிக எளிதாக இறை சக்தியை ஏற்படுத்தி, அதன் மூலம் அலைகளை பெருக்க செய்து பயன்பெற முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தான் கருவறைகளில் மூலவர் விக்கிரகங்கள் கல்லால் வடிவமைக்கப்பட்டவைகளாக அமைந்தன. அதே சமயத்தில் வீதி உலா செல்லும் உற்சவர் மூர்த்தியை பஞ்சலோகங்களால் செய்தனர்.
வெளி இடங்களில் உள்ள சக்தியை கிரஹித்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் உற்சவர் சிலைகள் உலோகத்தில் செய்யப்பட்டன. நாளடைவில் மூல விக்கிரகங்களுக் குரிய கற்களை கண்டுபிடித்து தேர்வு செய்து, அதில் சிலை செய்து, அதற்கு இறை சக்தி ஏற்படுத்தும் நுட்பத்தையும், சூட்சமத்தையும் தமிழர்கள் தெரிந்து கொண்டனர்.
எனவே, ஆயிரம் ஆண்டுகள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயங்களில் உள்ள மூல விக்கிரகங்கள், சிற்ப சிறப்புகள் மட்டுமின்றி, அதன் பின்னணியில் இறை ஆற்றலை வாரி வழங்கும் தன்மைகளை நிரம்ப கொண்டுள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா கருங்கல்லும் இறை ஆற்றலை வெளிப்படுத்தாது.
கருங்கல்லில் சூரிய காந்தக்கல், சந்திர காந்த கல், அலிக்கல் என்று மூன்று வகைகள் உள்ளன. சூரிய காந்த கற்கள் எப்போதும் சூடாக இருக்கும். இந்த வகை கல்லில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் கடவுள்களான சிவன், வீரபத்திரர், துர்க்கை, காளி போன்ற இறை வடிவங்களை செதுக்குவார்கள். சந்திரகாந்த கல் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.
எனவே இந்த வகைக் கல்லில் பெருமாள், புத்தர், தட்சிணாமூர்த்தி போன்ற கடவுள்களின் வடிவங்களை செய்வார்கள். அலிக்கல் என்பது சூடாகவும் இருக்காது. குளிர்ச்சியாகவும் இருக்காது. கல்லைத் தட்டும் போது ஓசையும் வெளியில் வராது. இத்தகைய கற்களில் எந்த மூலவர் சிலையையும் செய்ய மாட்டார்கள். மூலவர்கள் சிலைகள் பொதுவாக நிற்கும் நிலை (ஸ்தானகம்) அமர்ந்திருப்பது (ஆசனம்) படுத்து இருப்பது (சயனக் கோலம்) என்று மூன்று வகையாக தயாரிப்பார்கள்.
இந்த மூவகை மூலவர்களை எவ்வளவு உயரம், எவ்வளவு அகலத்தில் படைக்க வேண்டும் என்பதற்கு சிற்ப சாஸ்திர விதிகள் உள்ளன. சிற்ப கலையில் நவதாலம் என்று ஒரு அமைப்பு உண்டு. இதன்படி மூலவர் சிலை முகத்தின் நீளத்தை போல 9 மடங்கு சிலையின் மொத்த உயரம் இருக்க வேண்டும் என்பது அந்த அமைப்புக்குரிய விதியாகும்.
இப்படி அனைத்து விதிகளுடன், சிற்பி தன் கைத் திறமையையும் காட்டும் போது தான் பிரமாதமான மூலவர் சிலை கிடைக்கும். அதற்காக கல்லே கடவுள் ஆகிவிடாது. கல்லிலும் கடவுள் இருக்கிறார் என்பதையே பிரபஞ்ச உண்மை நமக்கு காட்டுகிறது. பிறகு எப்படி கல் முழுமையான இறை சக்தியை பெறுகிறது என்று நீங்கள் யோசிக்கலாம்.
சிற்பி செதுக்கும் மூலவர் சிலையை பல வகையான தானியங்கள் ஒவ்வொன்றிலும் 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் வைப்பார்கள். தண்ணீருக்குள்ளும் அந்த சிலை ஒரு மண்டலம் வைக்கப்படும். இதன் மூலம் அந்த சிலை, காஸ்மிக் கதிர் சக்தி கொண்ட பிரபஞ்ச சக்தியை மிக, மிக எளிதாக பெற்று விடும்.
இதையடுத்து சிலைக்கு கண் திறக்கப்படும். இதற்கு சில நியதி உள்ளது. கண் திறக்க முதலில் ‘ரத்ன நியாசம்’ எனப்படும் ஆராதனை செய்வார்கள். பிறகு சிலையின் தலை, நெற்றி, கழுத்து, மார்பு, நாபி, கைகள், பாதங்களில் நவரத்தினங்களை வைத்து பூஜை செய்வார்கள். பால் நிவேதனம் செய்து தூப, தீப ஆராதனை காட்டுவார்கள்.
பின்னர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும். இதையடுத்து கலச பூஜை நடத்துவார்கள். கருவறையில் எந்த மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளாரே அதற்கான மந்திரத்தை ஜெபித்து பூஜை செய்வார்கள். பின்னர் ஸ்தபதி விராட் விஸ்வ பிரம்மனை நினைத்துக் கொண்டு, தங்க ஊசி மூலம் சிலை கண்ணைத் திறப்பார்கள்.
முதலில் வலது கண்ணையும், பிறகு இடது கண்ணையும் திறக்க வேண்டும். சிலைக்கு கண்கள் திறக்கப்படும் போது ஸ்தபதியை தவிர வேறு யாரும் அருகில் இருக்கக் கூடாது. நான்கு புறமும் திரையிட்டு, திரை உள்ளேயே தீபம் காட்டி, பால், பழம், தேன் ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். சிலைக்கு கண்கள் திறக்கப்பட்டதும், முதலில் கண்ணாடி, பசுவின் பின்பாகம், ஒற்றைப்படை எண்ணிக்கையிலான பெண்கள், நெற்கதிர்கள், நவதானியங்கள், சன்னியாசி, வேதவிற்பனர் என்ற வரிசையில் மூலவர் பார்வைபடும்படி செய்ய வேண்டும்.
இறுதியில் தான் பக்தர்கள் மூலவர் பார்வையில் படுதல் வேண்டும். ஆக கருவறையில் மூலவர் சிலையை நிலை நிறுத்துவதில் இவ்வளவு நியதிகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை நம் முன்னோர்கள் 4 வகையாக பிரித்து வைத்துள்ளனர். தேவர்கள் செய்யும் பிரதிஷ்டைக்கு தைவீகம் என்று பெயர்.
அசுரர்கள் பிரதிஷ்டை செய்தால் அதை அசுரம் என்பார்கள். ராஜாக்களும், பக்தர்களும் முயன்று மூலவரை பிரதிஷ்டை செய்தால் அதற்கு மானுஷம் என்று பெயர். ரிஷிகள் செய்யும் பிரதிஷ்டைக்கு ஆர்ஷம் என்று பெயர். இவற்றின் தத்தவத்தை உணர்ந்ததால்தான் ஆதிசங்கரர், ராமானுஜர், நால்வர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், வாரியார் போன்ற ஞானிகள் மூலவர் சிலையை கண்டதும் பரவசமாகி அங்கு இறை ஒளியை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இது புரியாமல் கல்லை வழிபடுபவர்கள் மூடர்கள் என்று நாத்திகவாதிகள் சொல்கிறார்கள். அவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். ‘‘பஞ்ச சுத்தி செய்து நின்னை விளங்கும் பராபரமே...’’–என்ற நம் முன்னோர் வாக்குக்கு ஏற்ப கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட மூலவரை நாம் மனம் ஒன்றி வழிபட, வழிபட நமக்குள் ஞானம் விஞ்சும் என்பதை மறந்து விடக்கூடாது.

கடும் குடும்ப பிரச்சினைகள் அகல

கடும் குடும்ப பிரச்சினைகள் அகல

கடும் குடும்ப பிரச்சினைகள் அகல

கடும் குடும்ப பிரச்சினைகள் அகல;

உங்கள் ஊர் அல்லது அருகாமையில்  பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட பாதிப்பு நீங்கும்.

"ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்டராய தீமஹி
தந்நோ லக்ஷ்மிநரசிம்ம ஹ ப்ரசோதயாத்...

வீட்டில் தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க

வீட்டில் தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க

வீட்டில் தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க !

ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்கஃவாங்க வேண்டும்.

வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.

எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.

வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.

அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.

உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.

உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக:

இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒழித்தால், அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்க்ஷ்ம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால், நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம். காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் 

திங்கள், 21 மார்ச், 2016

லோக வசியம் லோக வசியம் மூலிகை பெயர்

லோக வசியம் லோக வசியம் மூலிகை பெயர்

லோக வசியம் லோக வசியம் மூலிகை பெயர்: மூக்கிரட்டை.{சிகப்பு சாரனை} மூலிகை படம் பூஷ நட்சத்திரம் வரும் நாள் பிரம்ம முகூர்த்தத்தில் காலை நேரம் 3.30 இல் இருந்து 5.30 நேரத்திர்குள் மஞ்சள் நூல் காப்பு கட்டி மூலிகை சாப நிவர்தி செய்து உயிர் கொடுத்து வேர் பிடுங்கி வலது கையில் கட்டிகொள்ள வசிகரசக்தி கிடய்க்கும் 1}மந்திரம் மூலிகை சாப நிவர்தி உயிர் கொடுக்கும் மந்திரம் ஓம் மூலி ஓங்கார மூலி சர்வ மூலி சர்வ சாபம் நசி மசி உன் உயிர் உன் உடலில் நிர்க்க சுவாஹா" {13} உரு 2}மந்திரம் ஓம் நமோ சர்வலோக வசீகராயா குரு குரு

மாயமாய் மறையும் ஜாலம்

மாயமாய் மறையும் ஜாலம்

மாயமாய் மறையும் ஜாலம்
அரிதாரத்தை கறுப்பு எருமைபாலை  அழிஞ்சில் தைலத்தோடு கலந்து ஒருவர் தனது சரீரத்தில் பூசிக் கொண்டால் அவர் மறைந்து போவார் என்பது சித்தர்கல் வாக்கு

பூதங்ககளைக் காண ஜால

பூதங்ககளைக் காண ஜாலம்

பூதங்ககளைக்   காண ஜாலம்
அழிஞ்சில் தைலத்தினால் விளக்கு ஏற்றி வைத்தால் அவர் அந்த வெளிச்சத்தில் இரவு நேரத்தில் பூமியில் வானில் போகும் பூதங்ககளைப் பார்க்கலாம்

காணாமல் மறையும் ஜாலம் வித்தை

காணாமல் மறையும் ஜாலம் வித்தை

காணாமல் மறையும் ஜாலம் வித்தை
ஆமைக்கு 7 நாட்கள்  வரை  மனச் சிலை அரிதாரம் இவ்விரண்டையும் சாப்பிடச் செய்யவும் .பிறகு அதன் மலத்தை கையில் பூசிக்கொண்டால் காணாமல் மறைந்து போவார்

பொதுவாக, குளங்களிலும் நீர்நிலைகளிலுல்

பொதுவாக, குளங்களிலும் நீர்நிலைகளிலுல் நாம் காசுகளைப் (நாணயங்களை) போடுவோம். இப்பழக்கம் தொன்று தொட்டே நம்மிடம் இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், அவ்வாறு செய்வதால் ஆகூழ் (அதிர்ஷ்டம்) வந்து சேரும் என்று கூறுவார்கள்.

உண்மையில் இதன் பின்னால் ஓர் அறிவியல் கூறு மறைந்திருக்கிறது. இப்பொழுது, துருப்பிடிக்கா எஃகால் செய்யப்படும் காசுகள் போல் அல்லாமல், முற்காலத்தில் காசுகள் செம்புகளால் தான் செய்யப்பட்டன. செம்பு நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு கனிமம் ஆகும். செம்பு தாது குறைபாடால் மூட்டுவலி, மாரடைப்பு என்று பல கோளாறுகள் ஏற்படும். எனவே, நம் முன்னோர்கள் செம்பு காசுகளை குளங்களில் போட்டனர். செம்புக் காசுகளில் இருக்கும் செம்பு அணுக்கள் நீருடன் கலக்கும், அதைக் குடிக்கும் மக்கள் உடலுக்கும் செம்பு தாது சேரும். முற்காலத்தில் குளத்து நீர்தான் ஊர்மக்கள் எல்லாருக்கும் குடிநீராகப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே பழக்கம் நாளடைவில் பொருளிழந்து தற்பொழுது நாமும் துருப்பிடிக்கா எஃகால் ஆன காசுகளைக் குளங்களில் போடுகிறோம்.

பின்னர், கனிமநீரை (mineral water) வாங்கி அருந்துகிறோம்.

  1. செம்பு குடங்களில் நீரைப் வைத்து அருந்துவது சிறப்பு. செம்பு நீர், புற்றுநோயைத் தவிர்க்கும் பண்புடையதாக அறிவியல் உலகம் கூறுகிறது

கனவு சாஸ்திரம்

கனவு சாஸ்திரம்

கருத்தரித்திருக்கும் பெண்மணி கனவில் தாமரை மற்றும் வெள்ளை நிற மலர்கள், பழங்கள் முக்கியமாக மாம்பழம் அல்லது மாங்காய் போன்றவை வந்தால் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும் என பலன் கொள்ளலாம்.
செம்பருத்தி,ரோஜா மலர்கள், வாழைப்பழம் கனவில் வருவது பெண் குழந்தை பிறப்பை உறுதி செய்யும் ஒன்றாகும்.
கனவில் தெய்வங்கள், பிராமணர்கள், உயிருள்ள காளை அல்லது பசு மாடு, கோவில், சர்ச், மசூதியில் பூஜை செய்பவர்கள், நீர் நிலைகள், எறியும் நெருப்பு போன்றவை தோன்ற உடல் நிலை முன்னேற்றம் மற்றும் இருக்கும் நோய்கள் விலகப்போவதின் அறிகுறியாக எடுத்து கொள்ளலாம். மேற்கண்டவை அசுத்தமான சூழலில் தென்பட்டால், அழுக்குடைகளுடன் அல்லது அசுத்தமான நீர் நிலை, இறந்த காளை அல்லது பசு, இடிந்த நிலையில் தெய்வீக இடங்கள் போன்றவையாக இருப்பின் உடல் தீங்கு பெரும் நோய் நேர்வதற்கான அறிகுறி.
கனவு சாஸ்திரம்-2
மரணம் வருவதை கனவுகள் பலருக்கு முன் கூட்டியே உணர்த்திவிடும். அதை பெரும்பாலானோர் உணர்வதில்லை. ஆரோக்யமாக உள்ள ஒருவருக்கு கூட சில பிரத்யேக கனவுகள் வரின் எனில், மரணம் உணர்த்தபடுகிறது எனலாம். அவற்றை அடுத்த பதிவுகளில் பாப்போம்.
பொதுவாக உறங்க ஆரம்பித்தவுடன் முதல் 2 மணி நேரத்தில் வரும் கனவுகள் ஒரு வருடத்திலும்,அடுத்த இரண்டு மணி நேரத்திலும் மற்றும் மதிய நேரத்தில் உறங்குவோருக்கும் வரும் கனவுகள் அடுத்த ஆறு மாதத்திற்குள்ளும் அடுத்த இரண்டு மணி மணி நேரத்தில் வரும் கனவுகள் மூன்று மாதத்திலும் கடைசி அதிகாலை கனவுகள் பத்தே நாட்களில் நடந்தேறும் என்கிறது 'ஹரித சம்ஹிதை' .
கனவு சாஸ்திரம் 3
கனவில் எறும்புகளை கண்டால் கவலை தரும் செய்தி ஒன்று வரவிருப்பதையும், பறவைகள் இடமாற்றத்தையும், காளைகள் நெருக்கடிகள் வரப்போவதையும், நீந்தும் மீன்கள் புதிய வாய்ப்புகளையும், நாய்கள் நன்மையையும், குறைக்கும் நாய் எனில் 'பெரும் பிரச்னை ஒன்றில் இருந்து நாம் விடுபடபோவதையும், நாய் கடிக்கும் படி கனவு வர- கஷ்டங்கள் வரப்போவதையும்,உயர பறக்கும் கழுகுகளை காணின் பெரும் அதிர்ஷ்டம்-செல்வ வரவையும், கிளிகள் வெளிநாட்டு பயணத்தையும், எலிகள் தொல்லைகள் வரப்போவதையும் உணர்த்தும் ஒன்றாகும். பாம்பை கொல்வதை போன்ற கனவு நாம் பெரிய எதிரி தொல்லையில் இருந்து ஜெயிப்பதற்கான அறிகுறியாகும். (நிஜத்தில் பாம்பை அடிப்பது-கொல்வது நேரெதிர் பலனை தரும் என்பதை நினைவில் கொள்க) .

அக்னி சுடாமல் தடுக்க ஜாலம் வித்தை

அக்னி சுடாமல் தடுக்க ஜாலம் வித்தை

அக்னி சுடாமல் தடுக்க ஜாலம் வித்தை
ஓம் நமோ அக்னிரூபாய மமசரீரேஸ்தம்
பனம் குரு குரு ஸ்வாஹா
இந்த 
21அச்சர மந்திரத்தை 108தடவை உரு ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும்

தவளைகொழுப்பு எடுத்து கற்றாலைச்  சாற்றில் அரைத்து உடம்பு முழுவதும் தடவிக் கொண்டல் அக்னி சுடாது

வியாழன், 17 மார்ச், 2016

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன...?


குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
- சற்று ஒரு பார்வை...
குலதெய்வம்...
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.
தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.
குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.
மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.
குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.
அதன் சக்தியை அளவிடமுடியாது...
எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.
எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.
குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.
இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?
நம் முன்னோர்கள்...
அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.
இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.
அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...
இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.
இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்...
இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!
நாம் அங்கே போய் நின்று...
அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.
இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்!...
விஞ்ஞான முறையில் யோசித்தால்...
ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே...
ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.
இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.
இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது.
தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.
தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.
ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்...
இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.
ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.
வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து...
இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு...
தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.
இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்...
பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்...
பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...
ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.
மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.
எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...
அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...
பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.
பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.
பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது...
அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.
இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ள�
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...
குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.
அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.
அக்கோவிலுக்கு உதவுங்கள்.
ஒவ்வொருவரின் கண் கண்ட முதல் குலதெய்வம் பெற்ற தாயும், தந்தையும் தான்...
"தாயிற் சிறந்த கோவிலுமில்லை...
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை..."
எனவே, நம் முதல் குலதெய்வமான பெற்றோர்களை போற்றுங்கள்

புதன், 16 மார்ச், 2016

செல்வம் பெருக ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம்

செல்வம் பெருக ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம்

செல்வம் பெருக ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ண பைரவாய ஹூம்பட் ஸ்வாஹா ஓம் நமோ பகவதே சுவர்ணாகர்ஷண பைரவாய தன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம் தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா

மஹா சுதர்ஸனர் மஹாமந்திரம்

மஹா சுதர்ஸனர் மஹாமந்திரம்

மஹா சுதர்ஸனர் மஹாமந்திரம் ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே! மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் ÷க்ஷõபன கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம்

4 September 2012

தன்வந்திரி ஸ்லோகம் சதுர்புஜம் பீத வஸ்திரம் ஸர்வாலங்கார சோபிதம் த்யோயேத் தன்வந்த்ரிம் தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

தன்வந்திரி ஸ்லோகம் சதுர்புஜம் பீத வஸ்திரம் ஸர்வாலங்கார சோபிதம் த்யோயேத் தன்வந்த்ரிம் தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம். சதுர்புஜம் பீத வஸ்திரம் ஸர்வாலங்கார சோபிதம் த்யோயேத் தன்வந்த்ரிம் தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

மகாலட்சுமியின் அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும்

மகாலட்சுமியின் அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும்

மகாலட்சுமியின் அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் லக்ஷ?மி ஹ்ருதயம் என்ற இதைக் குரு முகமாக உபதேசம் பெற்று அல்லது ஸ்வாமி படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து, பிரதி தினம் காலையில் 10 முறை; வெள்ளிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி, அதில் லெட்சுமி பூஜை செய்து 108 முறை இப்படி ஜெபித்தால் செல்வம் உண்டாகும். வேலை கிடைக்கும். ஸ்ரீ தேவிஹி அம்ருதோத் பூதா-கமலா-சந்த்ர சேபாநா விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச வராரோஹீ ச ஸார்ங்கிணீ ஹரி-ப்ரியா தேவ-தேவி மஹாலக்ஷ?மீ ச ஸுந்தரீ

வியாபாரத்தில் லாபம் உண்டாக

வியாபாரத்தில் லாபம் உண்டாக

வியாபாரத்தில் லாபம் உண்டாக ல÷க்ஷõ லக்ஷ ப்ரதோ லக்ஷ?யோ லயஸ்தோ லட்டுக ப்ரிய: லாஸ்ய ப்ரியோ லாஸ்ய பதோ லாப க்ருல்லோக விஸ்ருத: இதைப் பலதடவை கூறிவர லாபம் கிடைக்கும்.

பஞ்சமி தீபவழிபாடு (பஞ்சமி திதியன்று

பஞ்சமி தீபவழிபாடு (பஞ்சமி திதியன்று)

பஞ்சமி தீபவழிபாடு (பஞ்சமி திதியன்று) பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம் நாள் வருவது பஞ்சமி திதி. பஞ்ச என்றால் ஐந்து எனப்பொருள். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும். பஞ்சமி திதி அன்று ஐந்து எண்ணெய் கலந்து குத்துவிளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும். வேண்டுதல்களை மனதிற்குள் நினைத்துக் கொண்டே ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி கற்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்ய வேண்டும். ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ.

ஆபத்துக்கள் விலக

ஆபத்துக்கள் விலக

ஆபத்துக்கள் விலக சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும். தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும். விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது தடவை - கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும்.

பிருஹஸ்பதி மந்திரம்

பிருஹஸ்பதி மந்திரம்

பிருஹஸ்பதி மந்திரம் இம்மந்திரத்தை தினமும் பாராயணம் செய்வதால் செல்வம், அறிவு, சந்தானம் ஆகியவை கிட்டுவதுடன் ஆயுள் அதிகரிக்கும். மேலும் 1, 3, 6, 8, 12 முதலிய இடங்களில் குருவாசம் செய்தால் ஏற்படும் தோஷங்களும் நீங்கி குருவின் அருள் கிட்டும். 1. ஸ்ரீ கணேஸாய நம: ஓம் குருர் ப்ருஹஸ்பதிர் ஜீவ: ஸுராசார்யோ விதாம் வர: வாகீஸோ தி யோ தீர்க்க- ஸமஸ்ரு: பீதாம்பரோ யுவா 2. ஸுதா-த்ருஷ்டிர் க்ர ஹாதீஸோ க்ரஹ-பீடா-அபஹாரக: தயா-கரஸ் ஸெளம்ய மூர்தி: ஸுரார்ச்ய: குட்மல த்யுதி: 3. லோக்-பூஜ்யோ லோக-குரு நீதி-க்ஞோநீதி-காரக தாரா-பதிஸ்ச ச ஆங்கிரஸோ வேத-வேத்யோ பிதாமஹ 4. பக்த்யா ப்ரஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா நாமானி ஏதாநி ய: படேத் அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸ பவேந் நர: 5. ஜீவேத் வர்-ஸதம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதி ய: பூஜயோத் குரு-தினே பீத-கந்த-அக்ஷத-அம்பரை: 6. புஷ்ப-தீப-உபஹாரைஸ்ச பூஜயித்வா ப்ருஹஸ்பதிம் ப்ராஹ்மணான் போஜயித்வா பீடா-ஸர்ந்திர் பவேத் குரோ:

புதன், 2 மார்ச், 2016

சித்தர்களின் மூல மந்திரம்.

சித்தர்களின் மூல மந்திரம்.


சித்தர்களின் மூல மந்திரம்.

நந்தீச மூல மந்திரம் …”ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!”

அகத்தியர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”
திருமூலர் மூல மந்த்திரம்…
“ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!”
போகர் மூல மந்திரம்…
“ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!”
கோரக்கர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!”
தேரையர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!”
சுந்தரானந்தர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!”
புலிப்பாணி மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!”
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!”
காக புசண்டர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!”
இடைக்காடர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!”
சட்டைமுனி மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!”
அகப்பேய் சித்தர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!”
கொங்கணவர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!”
சிவவாக்கியர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!”
உரோமரிஷி மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!”
குதம்பை சித்தர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!”
கருவூரார் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!”